கவிதைகள் ...ரசிக்க.....
பறவையின் இசை ஒலிகள்
மனிதரின்உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !
கலில் கிப்ரான் -தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தீயிக்குத் தீராத தாகம் !
வேனிற் காலம்
எல்லா வற்றையும் எரித்து
வெந்திடச் செய்யும்.
பச்சை இலைகளைப் பின்னி
ஏடன் பூங்காவைக்
கட்டி முடிக்கும் !
காரணம்,
கரிய முகம் கொண்ட
காசினி
இன்னலுற விழைவ தில்லை !
வேனிற் காலம்
எல்லா வற்றையும் எரித்து
வெந்திடச் செய்யும்.
பச்சை இலைகளைப் பின்னி
ஏடன் பூங்காவைக்
கட்டி முடிக்கும் !
காரணம்,
கரிய முகம் கொண்ட
காசினி
இன்னலுற விழைவ தில்லை !
No comments:
Post a Comment